search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிசி கடத்தல்"

    • 22 மூட்டைகள் சிக்கியது
    • போலீசார் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த திருமால்பூர் ரெயில் நிலையத்திலிருந்து ஆந்திராவுக்கு செல்லும் மின்சார ரெயிலில் நேற்று இரவு அரக்கோணம் ரெயில்வே போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 25 கிலோ எடை கொண்ட 22 அரிசி மூட்டைகள் இருக்கையின் அடியில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அந்த பெட்டியில் பயணம் செய்த திருவண்ணாமலை மாவட்டம் உக்கல் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவர் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    மேலும் ரேசன் அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

    அவரை கைது செய்த போலீசார் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    • மகாராஜன் வீட்டில் ஆய்வு செய்தனர்.
    • பதுக்கி வைத்திருந்த ஒரு டன் 80 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    சுங்குவார்சத்திரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே சந்தவேலூர் ஈ.பி.காலணி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மகாராஜன் வயது (40). இவர் பொதுமக்களிடம் இருந்து இலவச ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி தன் வீட்டில் பதுக்கி வைத்து வடமாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பதாக ஸ்ரீபெரும்புதூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் குடிமை பொருள் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமையில் அதிகாரிகள் ஈ.பி. காலணி பகுதியில் உள்ள மகாராஜன் வீட்டில் ஆய்வு செய்தனர். போலீசார் நடத்திய ஆய்வின்போது அவரது வீட்டில் சுமார் 40 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளும், 20 கிலோ எடை கொண்ட 14 மூட்டைகளும் என மொத்தம் 1080 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் அரிசியை பதுக்கி விற்பனை செய்து வந்த மகாராஜனை போலீசார் கைது செய்து பதுக்கி வைத்திருந்த ஒரு டன் 80 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    • வாகனத்தில் 40 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
    • ரேசன் அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை-சத்தியவேடு சாலையில் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக ஆந்திரா நோக்கிச் சென்ற சந்தேகத்திற்கு இடமான ஒரு மினி லோடு வேனை மடக்கி நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 40 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

    ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட லோடு வேன் டிரைவரான சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கணேஷ் (வயது 32) என்பவரை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் கைது செய்தனர்.

    லோடு வேனுடன் ரேசன் அரிசியையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    • ரேஷன் அரிசியை கடத்தி அங்குள்ள கோழிப்பண்ணைக்கு கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
    • 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பெயரில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் ஈரோடு மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் மலையம்பாளையம் அடுத்த எழுமாத்தூர்-பாசூர் ரோடு முத்து கவுண்டன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஆம்னி வேன் ஒன்று வந்தது. அந்த வேனில் 2 பேர் இருந்தனர். அந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது 850 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, மொளாசி அடுத்த தேவம்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேந்திரன் (28), அதே பகுதியை சேர்ந்த கவியரசன் (25) என தெரிய வந்தது. 2 பேரும் ரேஷன் அரிசியை கடத்தி அங்குள்ள கோழிப்பண்ணைக்கு கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து சுரேந்திரன், கவியரசன் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • தாசில்தாரின் ஜீப்பில் ஜி.பி.எஸ். கருவி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது.
    • ரேஷன் அரிசி நூதன முறையில் கடத்திய நபரும், அதற்கு உடந்தையாக இருந்த ஜீப் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும்படை தாசில்தாராக பணியாற்றி வருபவர் இளங்கோ.

    இவர் தலைமையிலான குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தி ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து வருகிறார்கள். மேலும் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடித்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இந்த தாசில்தார் இளங்கோ பயன்படுத்தி வரும் அரசு ஜீப்பில் டிரைவராக கிருஷ்ணகிரியை அடுத்த பி.சி.புதூரை சேர்ந்த சுப்பிரமணி (59) என்பவர் பணியாற்றி வந்தார்.

    ஆரம்பத்தில் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, கலெக்டரின் டிரைவராக பணியாற்றினார். அதன் பிறகு இவர் பணி மாறுதலில் பறக்கும் படை தாசில்தார் இளங்கோவின் ஜீப் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் தாசில்தாரின் ஜீப்பில் ஜி.பி.எஸ். கருவி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. இதை கவனித்த அவர், இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பந்தப்பட்ட தாசில்தாரின் டிரைவர் சுப்பிரமணியை பணிமாறுதல் செய்து கிருஷ்ணகிரி தாசில்தார் ஜீப்பின் டிரைவராக நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், ஜி.பி.எஸ். கருவியை ரேஷன்அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த குருபரப்பள்ளி அருகே உள்ள நடுசாலையை சேர்ந்த தேவராஜ் (33) என்பவர் பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கருவி தேவராஜின் செல்போன் எண்ணுடன் இணைப்பில் இருந்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து தேவராஜை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் தான் ரேஷன் அரிசி கடத்தலுக்காக ஜி.பி.எஸ். கருவியை பறக்கும் படை தாசில்தாரின் ஜீப் டிரைவராக இருந்த சுப்பிரமணியிடம் வழங்கியதாகவும், அதை அவர் தான் ஜீப்பில் பொருத்தி எனக்கு உதவி செய்தார் என்றும் கூறினார்.

    இதையடுத்து ஜீப் டிரைவர் சுப்பிரமணியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அரிசி கடத்தல் மன்னன் தேவராஜ் கூறியவை உண்மை என தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஜி.பி.எஸ். கருவி வாங்கி தாசில்தாரின் ஜீப்பில் பொருத்தி ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த தேவராஜ், உடந்தையாக இருந்த தாசில்தாரின் ஜீப் டிரைவர் சுப்பிரமணி ஆகிய 2 பேரையும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வகிறார்கள்.

    கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க செல்லும் பறக்கும் படை தாசில்தாரின் ஜீப்பிலேயே ஜி.பி.எஸ். கருவியை பொருத்தி, வாகனத்தை கண்காணித்து, ரேஷன் அரிசி நூதன முறையில் கடத்திய நபரும், அதற்கு உடந்தையாக இருந்த ஜீப் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • ரேசன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    சென்னை, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை டி.எஸ்.பி சம்பத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப் - இன்ஸ்பெக்டர் ராஜா பாரதிதாசன் தலைமையிலான போலீசார் ஜாபர்கான் பேட்டை காசி தியேட்டர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஏராளமான ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கொடுங்கையூரை சேர்ந்த கமல்கிஷோர் (26), வியாசர்பாடியை சேர்ந்த மணி கண்டன் (23) ஆகிய 2பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது உணவுப் பொருள்கள் பதுக்கல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அங்கு ஸ்கூட்டரில், 2 பேர் பிளாஸ்டிக் சாக்குபைகள் மற்றும் மின்னணு தராசுடன் வந்தனர்.
    • கிருஷ்ணகிரியில் வீடு வீடாக ரேஷன் அரிசி வாங்கி, கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரிந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தாசில்தார் இளங்கோ தலைமையில், பறக்கும்படை வருவாய் ஆய்வாளர் துரைமுருகன், குடிமைப்பொருள் வருவாய் ஆய்வாளர் சத்தீஸ்குமார் ஆகியோர், நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர்.

    கிருஷ்ணகிரி நகராட்சி, பழையபேட்டை, 5-வது வார்டுக்குட்பட்ட முனுசாமி தெரு, குடிநீர் தொட்டி அருகில் 50 கிலோ அளவில், 19 மூட்டைகளில், 950 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்ட அதிகாரிகள் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல கிருஷ்ணகிரி தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் அருகில், 50 கிலோ அளவிலான, 22 மூட்டைகளில், 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அப்போது அங்கு ஸ்கூட்டரில், 2 பேர் பிளாஸ்டிக் சாக்குபைகள் மற்றும் மின்னணு தராசுடன் வந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கிருஷ்ணகிரியை அடுத்த துறிஞ்சிபட்டி ராஜா (40), வெங்கடேசன் (27) என்பதும், கிருஷ்ணகிரியில் வீடு வீடாக ரேஷன் அரிசி வாங்கி, கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரிந்தது.

    அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட, 2,050 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஸ்கூட்டரையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவரையும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 1200 கிலோ ரேசன் அரிசியுடன் 2 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
    • ரேசன் அரிசி கடத்தல் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மணலி புதுநகர் அருகே உள்ள கடப்பாக்கம் பகுதியில் சாலையோரம் ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் கடந்த 2 நாட்களாக கேட்பாரற்று நின்றது. இதுபற்றி அறிந்ததும் மணலி போலீஸ் உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கல்யாணசுந்தரம், பபிதா ஆகியோர் லாரிகளில் மூட்டைகளாக ரேசன் அரிசி இருப்பது தெரிந்தது.

    மர்ம நபர்கள் ரேசன் அரிசி கடத்தி வந்துவிட்டு போலீசாரின் சோதனைக்கு பயந்து வேன்களை இங்கு நிறுத்தி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. 1200 கிலோ ரேசன் அரிசியுடன் 2 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ரேசன் அரிசி கடத்தல் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் உடனடியாக லாரிகளை சோதனை செய்ததில் 7 டன் 950 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை ஸ்ரீபெரும்புதூர் நுகர் பொருள் வழங்கல் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் துறை தலைவர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சென்னை மண்டல பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா உத்தரவுப்படி, காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் போலீசார் மற்றும் காஞ்சிபுரம் சிறப்பு தாசில்தார் இந்துமதி ஆகியோர் இணைந்து காஞ்சிபுரம் அருகே கீழம்பி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வெளிமாநிலத்துக்கு கடத்துவதற்காக காஞ்சிபுரம் - வேலூர் சாலை கீழம்பி என்ற இடத்தில் 2 பேர் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    போலீசார் உடனடியாக லாரிகளை சோதனை செய்ததில் 7 டன் 950 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை ஸ்ரீபெரும்புதூர் நுகர் பொருள் வழங்கல் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    இது சம்பந்தமாக தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில், காஞ்சிபுரம் வெள்ளை கேட் அருகே நின்றுகொண்டு இருந்த சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த முரளி (31), கரண் (24) ஆகியோரை இன்ஸ்பெக்டர் சசிகலா கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 200 மூட்டை ரேசன் அரசி, பருப்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • ரேசன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு ரெயில் நிலையம், மீஞ்சூர் மற்றும் தடப்பெரும்பாக்கம் ,கிருஷ்ணாபுரம், பகுதியில் பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 200 மூட்டை ரேசன் அரசி, பருப்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவற்றை பஞ்செட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். ரேசன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 75 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து உச்சிமாகாளியை கைது செய்தனர்.
    • தலைமறைவாக உள்ள முருகன் மற்றும் ஈஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு-கோவில்பட்டி சாலையில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆல்பின் பிரிட்ஜ் மேரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் தலைமையில் போலீசார் கந்தசுப்பிரமணியன்:-

    பூலையா நாகராஜன் உள்ளிட்டோர் கயத்தாறு-கோவில்பட்டி பைபாஸ் சாலையில் சவலாப்பேரி ஊருக்கு மேற்கு பகுதியில் ஹரிஹரன் என்பவர் தோட்டத்தில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த வெள்ளானகோட்டை கீழத்தெருவை சேர்ந்த உச்சிமாகாளி(வயது 40) என்பவரை பிடித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து அரிசி மூட்டைகளை அவர்கள் சோதனை செய்தனர். அப்போது 40 கிலோ எடை கொண்ட 75 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து உச்சிமாகாளியை கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருமங்கலக்குறிச்சியை சேர்ந்த முருகன் என்பவர் ஏற்பாட்டில் உச்சிமாகாளி மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் சேர்ந்து 3 டன் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை கேரளா மாநிலத்துக்கு கடத்துவதற்காக தோட்டத்தில் பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து தலைமறைவாக உள்ள முருகன் மற்றும் ஈஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜன், செந்தட்டி அய்யன் ஆகியோர் புதூர் பாண்டியாபுரம் விலக்கு பாலம் அருகே சந்தேகப்படும்படியாக வந்த வானத்தை சோதனை செய்தபோது அதில் 30 மூட்டைகளில் 900 கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அந்த மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், வேனை ஓட்டி வந்த தூத்துக்குடி பி அன்ட் டி காலனியை சேர்ந்த காந்திசங்கரை கைது செய்தனர்.

    தொடர்ந்து தூத்துக்குடி அண்ணா நகர் 9-வது தெருவை சேர்ந்த அஜித்குமாருடன் சேர்ந்து பன்றி பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அஜித்குமாரை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினர் தேடி வருகின்றனர்.

    • பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாக, வெளிமாநிலங்களுக்கு கடத்த வைத்திருப்பது தெரியவந்தது.
    • பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே ஒலிமுகமதுபேட்டை ஹாஜி நகர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குடிமைப்பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை ஏ.டி.எஸ்.பி.அருண், கண்காணிப்பாளர் கீதா, துணை கண்காணிப்பாளர் நாகராஜன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒலிமுகமதுபேட்டை அருகே ஹாஜி நகர் பகுதியில் உள்ள பிலால் என்பவரது வீட்டிற்கு சென்றனர். வீட்டில் உள்ள அறைகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 50 கிலோ கொண்ட 30 மூட்டைகளில் சுமார் 1,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாக, வெளிமாநிலங்களுக்கு கடத்த வைத்திருப்பது தெரியவந்தது. எனவே, ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்த பிலால் (வயது 37), இடைதரகர்களாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் அப்துல் காதர் (52), திருக்காலிமேட்டை சேர்ந்த நாராயணமூர்த்தி (35) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    ×